சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தரப்பு பதில் தர ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. மனோஜ் பாண்டியன் வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது ஓபிஎஸ் தரப்பில் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளின் விசாரணை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.