×

மாதவரம் அரசு பள்ளிக்கு ரூ.32 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

திருவொற்றியூர்: மாதவரம் மண்டலம் 26வது வார்டுக்கு உட்பட்ட மந்தைவெளி தெருவில் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 860 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் என்று வார்டு கவுன்சிலர் ஆஸ்னா மெறிஷியாபெனின், மாதவரம் எம்எல்ஏ சுதர்சனத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அதன்பேரில், மாதவரம் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், மந்தைவெளி தெருவில் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி மண்டல குழு தலைவர் நந்தகோபால் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ கலந்து கொண்டு கட்டுமான பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் காளீஸ்வரி, கவுன்சிலர் ஆஸ்னா மெறிஷியாபெனின், முன்னாள் கவுன்சிலர் நாஞ்சில் ஞானசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Madhavaram Govt School ,MLA , Construction of additional classroom for Madhavaram Govt School at Rs 32 lakh: MLA inaugurated
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...