×

செய்யாறு அருகே வெறிநாய்கள் கடித்து 15 ஆடுகள் பலி

செய்யாறு: செய்யாறு அருகே கொட்டகைக்குள் நள்ளிரவில் புகுந்த வெறிநாய்கள் அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறியது. இதில் 15 ஆடுகள் பலியானது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தண்டரை கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன்(70). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் அருகே உள்ள அருகாவூர் கிராமத்தை சேர்ந்த இளையான் என்பவரின் செம்மறி ஆடுகளை கூலிக்கு மேய்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஜானகிராமன் வழக்கம்போல் செம்மறி ஆடுகளை மேய்த்துவிட்டு தனது வீட்டின் பின்புறமுள்ள கொட்டகையில் அடைத்து வைத்திருந்தார்.

நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கொட்டகையில் உள்ள ஆடுகள் திடீரென அலறின. இதைக்கேட்ட ஜானகிராமன் ஓடிச்சென்று பார்த்தபோது அங்கு வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த வெறிநாய்களை ஜானகிராமன் விரட்டியடித்தார். என்றாலும் வெறிநாய்கள் கடித்து குதறியதில் 15 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளன. இதைபார்த்த ஜானகிராமன் கதறி அழுதார். இதுகுறித்து வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் விசாரணை நடத்துகின்றனர்.

Tags : 15 goats died after being bitten by rabid dogs near Seiyaru
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...