சென்னை: ஆளுநரின் செயல்பாடு உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது என நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு 4 மாத அவகாசம் எடுத்திருக்க தேவையில்லை எனவும் தற்போதைய மசோதா என்ன வடிவத்தில் உள்ளதோ அதே வடிவத்தில்தான் அவசர சட்டம் இயற்றப்பட்டது எனவும் நீதிபதி சந்துரு கூறியுள்ளார். ஆளுநரின் செயல்பாடு மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கையை தாமதப்படுத்தும் செயல் என நீதிபதி சந்துரு கண்டனம் தெரிவித்துள்ளார். அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.