சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமதே; நாடும் நமதே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் ப.மாணிக்கம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பேசி வருகிறார். தமிழ்நாட்டில் அமைந்த ஒற்றுமை அனைத்து மாநிலங்களிலும் உருவானால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம் எனவும் அவர் பேசியுள்ளார்.