×

இந்தியாவில் நடப்பு ஜனவரியில் 29 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்: முறைகேடுகளை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கம்

டெல்லி: இந்தியாவில் கடந்த ஜனவரியில் 29 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களின் ஒன்றான வாட்ஸ்அப் நிறுவனம் மாதந்தோறும் பயனாளர் பாதுகாப்பு அறிக்கையை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. ஒன்றிய அரசு அமல்படுத்திய தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட சமூக வலைத்தளங்கள் மாதந்தோறும் தங்கள் பயனாளர்களின் புகார்கள் மற்றும் அதன் மீதான நடவடிக்கைகளை அறிக்கையாக வெளியிட வேண்டும். .

அதன்படி, நடப்பாண்டில் ஜனவரி மாதம் இந்தியாவில் 29 லட்சத்து 18 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவற்றில் பயனாளர்களிடமிருந்து எந்தவித புகார்களும் வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை அடிப்படையில் 10 லட்சத்து 38 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பயனாளர்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் அதனை பெற்றுக்கொண்டு எடுக்கப்பட்ட பதில் நடவடிக்கை, சமூக தளம் தவறாக பயன்படுத்தப்படாமல் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை அந்த அறிக்கை கொண்டிருக்கும்.

Tags : WhatsApp ,India , India, January, WhatsApp, Account, Disable
× RELATED நெட் இல்லாமல் வாட்ஸ்அப்பில் தகவல்...