×

12 உதவி கலெக்டர்கள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை:  தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு:  கன்னியாகுமரி மாவட்ட உதவி கலெக்டர் (பயிற்சி) ரிஷப், உதகை மண்டல உதவி கலெக்டராக நியமிக்கப்படுகிறார். திருவண்ணாமலை உதவி கலெக்டர் அமித்குமார் இரண்டாம் கட்ட பயிற்சி முடித்ததையடுத்து விருதாச்சலம் உதவி கலெக்டராகவும், சேலம் மாவட்ட உதவி கலெக்டர் வீர் பிரதாப் சிங், மேட்டூர் உதவி கலெக்டராகவும், நாகப்பட்டினம் மாவட்ட உதவி கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி குன்னூர் உதவி கலெக்டராகவும், திருச்சி மாவட்ட உதவி கலெக்டர் சித்ரா விஜயன் தர்மபுரி உதவி கலெக்டராகவும் நியமிக்கப்படுகின்றனர். அதேபோல், தஞ்சாவூர் உதவி கலெக்டர் அமித், திண்டிவனம் உதவி கலெக்டராகவும், திருநெல்வேலி மாவட்ட உதவி கலெக்டர் அலர்மேல் மங்கை, திருப்பத்தூர் உதவி கலெக்டராகவும், தேனி மாவட்ட உதவி கலெக்டர் தாக்ரே சுபம் நயந்தியாராவ், பொள்ளாச்சி துணை கலெக்டராகவும், தூத்துக்குடி மாவட்ட உதவி கலெக்டர் பிரத்விராஜ், சிவகாசி உதவி கலெக்டராகவும் நியமிக்கப்படுகின்றனர். அறந்தாங்கி துணை கலெக்டர் ஆனந்த் மோகன், தாராபுரம் துணை கலெக்டராகவும், உதகை மண்டல துணை கலெக்டர் பெரியகுளம் துணை கலெக்டராகவும், திருநெல்வேலி துணை கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி, சேரன்மகாதேவி துணை கலெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post 12 உதவி கலெக்டர்கள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Govt ,Kanyakumari District ,Rishop ,Tamil Nadu Government ,
× RELATED அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள்...