×

அம்பத்தூரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது: 3 கிலோ பறிமுதல்

அம்பத்தூர்: அம்பத்தூரில் கஞ்சா விற்ற வாலிபர்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அம்பத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலினடிப்படையில், அம்பத்தூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையிலான தனிப்படை போலீசார், அம்பத்தூரில் சோதனை நடத்தினர். அப்போது, அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையின் பக்கத்தில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது அவர், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த போனாங்க தாரா பாபு (19) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து அம்பத்தூர் பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட போனாங்க தாரா பாபுவை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Ambatur , Teenager arrested for selling ganja in Ambatur: 3 kg seized
× RELATED அம்பத்தூர்-புழல் நெடுஞ்சாலையில்...