சென்னை: சென்னை திருவேற்காடு ஸ்ரீதேவி நகரில் தனியார் நிறுவன ஊழியர் ஆரோக்கியசாமிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். ஆரோக்கியசாமியை மர்ம நபர்கள் வெட்டியபோது தடுக்க வந்த அவரது பாட்டி லட்சுமிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவேற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.