சென்னை: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும், விரைவில் தேர்தல் ஆணையத்தை நாடி அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுப்போம் என ஓ.பி.எஸ். ஆதரவு உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகலுடன், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் இன்று மனு அளிக்க உள்ளனர்.