விருதுநகர்: விருதுநகரில் மோசமான முறையில் பராமரிக்கப்பட்ட யானைக்கு உரிய சிகிச்சை அளிக்க வனத்துறை உத்தரவிட்டுள்ளது. உரிய அனுமதியின்றி கோயில் நிகழ்ச்சிகளில் பயன்படுத்திய யானையை வனத்துறையினர் மீட்ட நிலையில் உத்தரவிட்டுள்ளனர். பெண் யானை லலிதாவை பராமரிப்பதற்கான செலவை யானை உரிமையாளரிடம் இருந்து பெறவும் வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
