×

பாஜவினர் உண்ணாவிரதம்: அண்ணாமலை உள்பட ஏராளமானோர் பங்கேற்பு

சென்னை: முன்னாள் ராணுவ வீரர் படுகொலையை கண்டித்து சென்னையில் நேற்று பாஜ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் அண்ணாமலை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரியில் பிரபு  என்கிற ராணுவ வீரர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து தமிழ பாஜ சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜ தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி நேற்று சென்னை சிவானந்தா சாலையில், பாஜ சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு பாஜ தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். இதில் முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவ படையினர், அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Fasting ,BJP ,Annamalai , Fasting by BJP: Many people including Annamalai participated
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...