சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த மேலும் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பி.பார்த்திபனை நியமித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆணையிட்டுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.