×

மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: தமிழ்நாடு அரசு

சென்னை: விதிகளுக்கு புறம்பாக மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பி. செந்தில்குமார் தகவல் அளித்துள்ளார். விதிகளுக்கு புறம்பாக தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில்  மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



Tags : Tamil Nadu Govt , Medical Waste, Gangster Act, Tamil Nadu Govt
× RELATED ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில்...