கொல்கத்தா: அரசியல் பழிவாங்கலை குறிக்கோளாக கொண்டு பாஜக அரசு நிர்வாகத்தை நடத்தி வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். பாஜக அரசின் பழிவாங்கல் நடவடிக்கையில் பத்திரிக்கை சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. செய்தி ஊடகங்கள் அனைத்தும் ஏற்கனவே பாஜகவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நாட்டில் ஒரு ஊடகத்தைக் கூட பாரதிய ஜனதா கட்சி விட்டுவைக்காது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.