சென்னை: ஐஏஎஸ் அதிகாரி அமுதா தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் அமுதா, தாயார் பி.ரத்தினம் உடல்நலக்குறைவால் மறைந்ததையறிந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அமுதா அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தாயாரை இழந்து வாடும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.