சென்னை: 21வது ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் குழு சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு (எஸ்ஆர்ஐஎப்) நடத்தும் இத்தொடர், பெரியார் சாலையில் உள்ள ஸ்குவாஷ் அகடமியில் பிப்.12ம் தேதி வரை நடைபெறும். மகளிர் குழு போட்டியின் ஏ பிரிவில் மலேசியா, ஜப்பான், கொரியா, தைவான் அணிகளும், பி பிரிவில் இந்தியா, ஹாங்காங், சிங்கப்பூர், இலங்கை அணிகளும் விளையாட உள்ளன. ஆண்கள் குழு ஏ பிரிவில் பாகிஸ்தான், ஹாங்காங், கொரியா, இலங்கை, குவைத் அணிகளும், பி பிரிவில் இந்தியா, மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், தைவான் அணிகளும் பங்கேற்கின்றன. இறுதி ஆட்டங்கள் மற்றும் பரிசளிப்பு விழா பிப்.12ம் தேதி நடத்தப்படும். நேற்று நடைபெற்ற கோப்பை அறிமுக விழாவில், ஸ்குவாஷ் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் இந்திய வீரர், வீராங்னைகள் பங்கேற்றனர்