×

மார்க்சிஸ்ட் பணிக்குழு அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனை கூட்டம், மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றிட 52 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது.

* டிஎஸ்பி இட மாற்றம் நிறுத்திவைப்பு
ஈரோடு  டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார். இவரை ஈரோடு  இடைத்தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே திருப்பத்தூர் மாவட்ட க்யூ பிராஞ்ச்  டிஎஸ்பியாக பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. டவுன் சப்-டிவிசனுக்கு உட்பட்ட 5  போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைப்பகுதிகளில் கிழக்கு சட்டமன்ற தொகுதி வருவதாலும், தேர்தல் முடியும் வரை டவுன் டிஎஸ்பியாக ஆனந்தகுமாரே தொடரகாவல் துறை  உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Marxist Working Group Declaration
× RELATED சாவர்க்கர் பிறந்தநாளையொட்டி அவரது...