×

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நாஞ்சில் சம்பத்தின் உடல்நலம் குறித்து தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை: உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நாஞ்சில் சம்பத்தின் உடல்நலம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியின் வாயிலாக கேட்டறிந்தார்.   

திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உடல்நலக் குறைவால், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், உடல்நலக்குறைவால் கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் சம்பத் உடல்நலம் குறித்து அவரது மகன் மருத்துவர் சரத் பாஸ்கரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆர். மகேஷ் ஆகியோரை தொடர்புகொண்டு, நாஞ்சில் சம்பத்துக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தினார்.



Tags : Nanjil incident ,G.K. Stalin , Chief Minister M.K. inquired about the health of Nanjil Sambhat, who is being treated for ill health. Stalin
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...