×

என்னை கிண்டல் செய்ய உரிமையில்லை: இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கோபம்

சென்னை: பிருத்விராஜ், நயன்தாரா நடித்த கோல்டு மலையாள படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படம் சமீபத்தில் வெளியாக தோல்வி அடைந்தது. இதையடுத்து அல்போன்ஸ் புத்திரனை ரசிகர்கள் கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கிறார்கள். இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் அல்போன்ஸ் புத்திரன் கூறியதாவது: ‘கோல்டு’ படத்தை இப்படி மனசாட்சியே இல்லாமல் விமர்சிக்கிறீர்கள். இது உங்களுக்கு சந்தோஷத்தை தரலாம். ஆனால் எனக்கோ துளியும் சந்தோஷத்தை தரவில்லை.

துக்கத்தையும் விரக்தியையும் தருகிறது. உங்களுடைய நிம்மதிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் நான்தான் கிடைத்தேனா? என்னை கிண்டல் செய்யவோ, விமர்சிக்கவோ உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? மேலும் உங்களுக்கு பிடித்தால் எனது படங்களை பாருங்கள், உங்கள் கோபங்களை வெளிப்படுத்துவதற்காக என்னுடைய சமூக வலைதள பக்கத்திற்கு வர வேண்டாம், நீங்கள் தொடர்ந்து இவ்வாறு செய்து கொண்டிருந்தால் நான் இணையத்தை விட்டு வெளியேறி விடுவேன் என்று கூறியுள்ளார். தமிழில் நேரம், மலையாளத்தில் பிரேமம் ஆகிய படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Alphonse Putran , You have no right to tease me: Director Alphonse Putran's anger
× RELATED நான் வேறு யாருக்கும் பாரமாக இருக்க...