சென்னை: இரட்டை இலை சின்னம் வைத்திருக்கும் வேட்பாளருக்கே ஆதரவு தரப்போவதாக ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார். பழனிசாமி தரப்பு நிர்வாகிகளுடனான சந்திப்புக்கு பின் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பழனிசாமி, பன்னீர்செல்வம் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இன்று மாலை என்னை சந்திக்க வரும் ஓ.பன்னீர்செல்வத்திடம் அணிகள் இணைப்பை வலியுறுத்துவேன் என ஜான் பாண்டியன் கூறினார்.