சென்னை: தமிழகம் என்று கூறிய ஆளுநர், தற்போது புது விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என திராவிட கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் என்று ஏன் கூறினேன் என்று விளக்க வேண்டிய நிர்பந்தம் ஆளுநருக்கு ஏற்பட்டது ஏன்? எனவும், காசிக்கும், ஆளுநரின் இந்த வெளிப்பாட்டுக்கும் உள்ள சம்பந்தம் என்ன? என கி.வீரமணி எழுப்பியுள்ளார்.