×

தாம்பரம், பல்லாவரத்தில் கோயில் பணியாளர், அர்ச்சகர்களுக்கு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு: எம்எல்ஏக்கள் வழங்கினர்

தாம்பரம்: தாம்பரம், பல்லாவரத்தில் கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி வழங்கினர்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தை 1, தமிழர் திருநாளான தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

தாம்பரம் மற்றும் பல்லாவரம் எம்எல்ஏ தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோயில்களிலும் உள்ள அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை 120 பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா வழங்கினார்.

மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சுரேஷ், ரமணி ஆதிமூலம் மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.திருநீர்மலையில் உள்ள ரங்கநாத பெருமாள் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் திருநீர்மலை ரங்கநாதர் பெருமாள் கோயில் மற்றும் திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோயில், அதன் குழு கோயில்களை சேர்ந்த 91 பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி வழங்கினார். இதில், மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி, பகுதி செயலாளர் திருநீர்மலை ஜெயக்குமார், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர்.



Tags : Thambaram ,Pallavaram , Temple staff, priest, Pongal gift set, MLA presented
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட...