×

நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியது தமிழ்நாடு அரசு: ஆளுநர் ரவி பேச்சு

சென்னை: நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சர்வதேச அளவிலான செஸ் போட்டியை தமிழ்நாடு அரசு பிரம்மாண்டமாக நடத்தியது. விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்தப்படும் என முதல்வர் அறிவித்தார். முதல்வர் அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் கபடி, கால்பந்து, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளன என ஆளுநர் கூறினார்.

Tags : Tamil Nadu Government ,Chess Olympiad ,Chennai ,Governor Ravi , Chennai, Chess Olympiad, Government of Tamil Nadu, Governor Ravi
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...