சென்னை: சென்னை விமான நிலையத்தில் தரம் இல்லாத 327 பொம்மைகளை பி.ஐ.எஸ். அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விமான நிலையத்தில் உள்ள பொம்மை கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் தரமில்லாத பொம்மைகள் சிக்கின. இந்திய தர நிர்ணய அமைய வனத்தின் சென்னை கிளை அதிகாரிகள் நேற்று சென்னை விமான நிலையத்தில் சோதனை செய்தனர். சோதனையின் போது பிஐஎஸ் ஹால்மார்க் இல்லாத 327 பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டன.