×

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திட வைகோ வேண்டுகோள்

சென்னை: பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திடக்கோரி தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது  குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: அரசுப்  பள்ளிகளில், பத்தாண்டுகளாக உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை உள்ளிட்ட 12  ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய பல வருடங்களாக கோரி வருகிறார்கள்.

ஏழை, எளிய, அடித்தட்டு, விளிம்பு நிலையில் இருக்கின்ற பட்டதாரி ஆசிரியர்  குடும்பங்கள் வறுமையிலிருந்து விடுபட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை  கருணையோடு பரிசீலனை செய்து, பணி நிரந்தரம் செய்து பொங்கல் பரிசாக 12 ஆயிரம்  குடும்பங்களில் விளக்கேற்றிட மதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Waiko , Waiko appeals to make part-time teachers permanent
× RELATED எடப்பாடி, ஓபிஎஸ், செல்வப்பெருந்தகை,...