ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பூண்டி கிழக்கு ஒன்றியம் பேரிட்டிவாக்கம் ஊராட்சியில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய பேருந்து நிழற்குடை மற்றும் புதிய மின் மாற்றி திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தில்லைகுமார் தலைமை வகித்தார். பூண்டி திமுக ஒன்றிய செயலாளர்கள் டி.கே.சந்திரசேகர், ஜான் பொன்னுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம், உதவி செயற் பொறியாளர் சேகர், இளநிலை பொறியாளர் செந்தில், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர் பால் எபினேசர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு பேருந்து நிழற்குடை மற்றும் புதிய மின் மாற்றியை திறந்துவைத்து மக்களுக்கு அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மணிபாலன், பேரூர் செயலாளர் அபிராமி, ஊராட்சி துணை தலைவர் முனுசாமி, ஊராட்சி செயலாளர் தனசேகர், திமுக நிர்வாகிகள் சிவய்யா, ஸ்ரீராம், நாகராஜ், சீனிவாசன், ராகவன், சக்ரவர்த்தி, விஜயன், பாபு, பேரிட்டிவாக்கம் ஊராட்சியை சேர்ந்த உதயகுமார், தாமோதரன், நாகராஜ், பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.