×

தலைமை செயலகத்தில் 9 நிருபர் பணியிடங்களுக்கு 176 பேர் தேர்வு எழுதினர்: டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: தலைமை செயலகத்தில்  9 நிருபர் பணியிடங்களுக்கு 176 பேர் தேர்வு எழுதியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தலைமைச் செயலக பணியில் அடங்கிய தமிழ் மற்றும் ஆங்கில நிருபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதம்  வெளியிட்டது. இதில்  ஆங்கில நிருபர் பதவிக்கு 6 பணியிடங்கள், தமிழ் நிருபர் பதவிக்கு 3 பணியிடங்கள் என  9 பணியிடங்கள் காலியாக இருந்தன.

இதற்கான தேர்வு இன்று சென்னையில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் 11 மணி வரை சுருக்கெழுத்து தேர்வும், மதியம் 2.30 முதல் மாலை 5.30 மணி வரை பொது தமிழ், பொது ஆங்கில தேர்வும் நடைபெற்றது. இதில் 176 பேர் கலந்து கொண்டனர்.  மொத்தமுள்ள 9 பணியிடங்களுக்கு  ஆண்கள் 109 பேர், பெண்கள் 67 பேர் என மொத்தம் 178 பேர் விண்ணப்பித்தனர். இதில் 2 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை ஊதியம் வழங்கப்படும்.

Tags : Chief Secretariat ,DNBSC , 176 Candidates Appeared for 9 Correspondent Posts in Chief Secretariat: TNPSC Information
× RELATED விதிகளை மீறி பத்திரிகைகளில் பாஜ...