சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கயல்விழி தலைமையில் நடைபெற்றது. சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டில் மிகவும் அக்கறை உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, இன்று தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அவற்றின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தலைமையில் நடைபெற்றது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்து அமைச்சரால் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வறிவிப்புகளை விரைவாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், இத்திட்டங்களின் பயன் அவர்களை விரைந்து சென்றிடுவதை உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் கயல்விழி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு தென்காசி சு ஜவஹர் இ ஆ ப, ஆதிதிராவிடர் நல இயக்குநர் திரு.டி..ஆனந்த் இ.ஆ.ப., தாட்கோ மேலாண்மை இயக்குநர் திரு. கே.எஸ்.கந்தசாமி, இ.ஆ.ப., பழங்குடியினர் நல இயக்குநர் திரு. எஸ் அண்ணாதுரை, ம.தொ.ப., சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி காவல்துறைத் தலைவர் திருமதி பி.ஆர். வெண்மதி, இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
