×

ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 24ம் ஆண்டு திருவிளக்கு பூஜை

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள ஸ்ரீஐம்பொன் ஐயப்பா சேவா சங்கம் சார்பில், 24வது ஆண்டு திருவிளக்கு பூஜை  நடைபெற்றது. இதில் சேவா சங்கத்தின் குருசுவாமிகள் எஸ்.ராஜ்குமார், ஏ.ருக்மாங்கதன், எஸ்.கோபாலகிருஷ்ணன், சங்க உறுப்பினர்கள் ஏற்பாட்டில் கடந்த 23 ஆண்டுகளாக இந்த திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இதில், கல்வி, திருமண தடை,  வேலை வாய்ப்பு,  குழந்தையின்மை, தொழிலில் முன்னேற்றம், உலக நன்மை போன்ற‌ எந்த வேண்டுதலாக இருந்தாலும் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றால் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகமாக உள்ளது.

இந்த பூஜையில் கலந்துகொள்ள பெண்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 24 வது ஆண்டாக திருவிளக்கு பூஜையில் ஸ்ரீவித்ய உபாஸகர் வேதாந்த ராமமூர்த்தி கலந்துகொண்டு வேத மந்திரங்கள் சொல்ல திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள் அதனை சொல்லி பூஜையில் ஈடுபட்டனர். பூஜையில்  பங்கேற்றவர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு வேத மந்திரத்தை சொல்லி வழிபட்டனர். திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை வழிபட்டனர்.

Tags : Iyappa Seva Association ,Tiruvvaku Puja , 24th annual Thiruvilakku Puja by Ayyappa Seva Sangam
× RELATED அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில்...