×

ஆபரேஷன் கஞ்சா வேட்டை தமிழக காவல் துறைக்கு ஜவாஹிருல்லா பாராட்டு

சென்னை: கஞ்சா வேட்டை வாயிலாக காவல்துறை முன்னெடுத்திருக்கும் செயல்பாடுகள் பாராட்டுதலுக்குறியது என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார். இது குறித்து நேற்று அவர்  வெளியிட்டுள்ள அறிக்கை: கஞ்சா வேட்டை 3.0 என்ற பெயரில் தமிழகம் முழுவதும், 12.12.2022 அன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாள்களில் 403 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதிரடி வேட்டையில் இறங்கி இருக்கும் காவல்துறையின் இந்த செயல்பாடுகளை நெஞ்சார பாராட்டுகிறேன்.


Tags : Jawahirullah ,Tamil Nadu Police ,Ganja Hunt , Jawahirullah praises Tamil Nadu Police for Operation Ganja Hunt
× RELATED தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்...