மதுரை: வேலை வாய்ப்புடன் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் தகுதி தேர்வை நடத்தி பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பை தர நடவடிக்கை எடுக்க கோரி அரவக்குறிச்சியை சேர்ந்த ஜவஹர்லால் நேரு என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து கூறியுள்ளது. தமிழக கல்லூரிகளில் வளாக நேர்காணலில் கலந்துகொள்ளும் இந்திய பன்னாட்டு நிறுவனங்களின் பின்புலத்தை ஆராய வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.