36 அரசு கல்லூரி மருத்துவமனைகளில் மனம் என்ற அமைப்பு தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மனம் அமைப்பு மூலமாக மனநல பயிற்சி வழங்கப்படும். மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு மனநல பயிற்சி வழங்கப்படும் என்று அவர் கூறினார். மனம் அமைப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு வாரத்தில் தொடங்கி வைப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.