×

முதியவரின் சொத்தை அபகரித்த மகனுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆர்டிஓ உதவியாளர் சஸ்பெண்ட்

மதுரை: மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் சதாசிவம் (82). முன்னாள் ராணுவ வீரர். மத்திய கலால் துறையில் ஓய்வு பெற்றவர். தற்போது பென்சன் பெறுகிறார். கடந்த 2021ம் ஆண்டு இவரது மனைவி கமலா இறந்துவிட்டார். இதன்பிறகு இவரை இவரது மகன்கள் மற்றும் மகள் முறையாக கவனிக்கவில்லை. இவரது 2வது மகன் கோவையில் வருமானவரித்துறையில் உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும் வருமானவரித்துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சதாசிவத்தை அவரது மகளால் கவனிக்க முடியவில்லை.

இதனால், சதாசிவம் கோவையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது பெயரில் இருந்து ெசாத்து, நகை மற்றும் பணத்தை அபகரித்துக் கொண்ட அவரது மகன், தந்தையை வீட்டை விட்டு விரட்டிவிட்டுள்ளார். இதனால், தனது சொத்தை மகன் அபகரித்துக் கொண்டதாகவும், அவற்றை மீட்டு தருமாறும் முதியவர் சதாசிவம் கடந்த 6 மாதத்திற்கு முன் மதுரை ஆர்டிஓவிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இதனிடையே, முதியவர் சதாசிவம் மதுரை கலெக்டர் அனீஷ் சேகரை சந்தித்து நேற்று புகார் அளித்துள்ளார்.

அதில், எனது சொத்து, நகைகள் மற்றும் பணத்தை பறித்து கொண்டு, தன்னை விரட்டி விட்டது தொடர்பாக புகார் அளித்தேன். ஆனால், ஆர்டிஓ நேர்முக உதவியாளராக இருந்த செல்வராஜ், என் மகனுடன் பேசியுள்ளார். அவருக்கு சாதகமாக செயல்படுகிறார் எனக் கூறி அதற்கான ஆடியோ உரையாடல்கள் உள்ளிட்ட ஆவணங்களை கலெக்டரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து கலெக்டர், ஆர்டிஓ உதவியாளரிடம் இரவோடு இரவாக விசாரணை நடத்தியுள்ளார். இதில், செல்வராஜ் மீதான புகார் உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, கூடுதல் கலால் அலுவலர் கிருஷ்ணனை ஆர்டிஓ நேர்முக உதவியாளராக நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : RTO , RTO Assistant suspended for son who stole old man's property
× RELATED நன்னடத்ைத உறுதிமொழி பத்திரம் அளித்த 262...