×

மூணாறில் தமிழர் வீடுகள் அகற்றம்: கேரளாவுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: மூணாறில் வாழும் தமிழர்களின் வீடுகளை காலி செய்ய கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படும் எல்லை அளவீடு சட்டவிரோதம் எனும் நிலையில், அதைக் காரணம் காட்டி தமிழர்களின் வீடுகளை அகற்றுவது கண்டிக்கத்தக்கது.

கேரள அரசின் எல்லை மறு அளவீட்டுப் பணிகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படாவிட்டால், தமிழக எல்லை ஆக்கிரமிக்கப்படுவது மட்டுமின்றி, மராட்டியத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே எவ்வாறு எல்லைப் பிரச்னை தீராத சிக்கலாக உருவெடுத்துள்ளதோ, அதேபோல் தமிழ்நாட்டிற்கும், கேரளத்திற்கும் இடையிலும் எல்லைச் சிக்கல் உருவெடுக்கக் கூடும். அதை தடுத்து நிறுத்த வேண்டிய பெரும் பொறுப்பும், அரசுக்கு உண்டு.


Tags : Munnar ,Ramadoss ,Kerala , Ramadoss condemns Kerala for demolition of Tamil houses
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு