டெல்லி: ஆவினில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமினில் தளர்வு தர அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தனக்கு வழங்கியுள்ள ஜாமினில் தளர்வு கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது; குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.