சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான பிரியா மரணம் அவரது குடும்பம், விளையாட்டுத்துறைக்கும் மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் பிரியாவின் உயிர்க்கு ஈடாகாது என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் பிரியாவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிவிட்டு வீடு வழங்கும் ஆணையை வழங்கிய பிறகு முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.