×

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு புத்தாடை: தா.மோ.அன்பரசன் வழங்கினார்

ஆலந்தூர்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ஆலந்தூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தாடையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். ஆலந்தூர் மண்டலம் 163வது வார்டு சார்பாக, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ஆதம்பாக்கதில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளை ஆலந்தூர் 163வது வார்டு திமுக கவுன்சிலர் பூங்கொடி ஜெகதீஸ்வரன் தொடக்கி வைத்தார். இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா ஆலந்தூர் எம்எல்ஏ அலுவலகத்தில் நடந்தது. இதில் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை வழங்கினார். விழாவில், ஆலந்தூர் மண்டல குழுத் தலைவர் என்.சந்திரன், ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக செயலாளர் ப.குணாளன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், திமுக வட்ட செயலாளர்கள் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், எ.வேலவன்,  டி.ஜேசுதாஸ், ஜெ.நடராஜன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags : Children's Day ,Puthadai ,Th.Mo.Anparasan. , On the occasion of Children's Day Puthadai was presented to the students by: Th.Mo.Anparasan
× RELATED குழந்தைகளுக்கான உரிமைகளும் பாதுகாப்பு சட்டங்களும்!