சென்னை: சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை சென்னை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.