×

தமிழ் சினிமா படப்பிடிப்புகள் தொடங்கியது

சென்னை: தமிழக அரசு அளித்துள்ள தளர்வுகளின்படி நேற்று படப்பிடிப்புகள் தொடங்கியது. இது குறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது: படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ள அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். படப்பிடிப்பு நடத்துகிறவர்கள் கண்டிப்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். படப்பிடிப்புகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிக்க தனி ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம்.  நேற்று 16 சின்னத்திரை சீரியல்களின் படப்பிடிப்புகள் தொடங்கி இருக்கிறது. தயாராக இருந்த சில படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கி இருக்கிறது. வருகிற வெள்ளிக் கிழமை முதல் அனைத்து படப்பிடிப்புகளும் முழுவீச்சில் நடக்கும். படப்பிடிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய பிற பணிகள் முழுவீச்சில் தொடங்கி உள்ளது. 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும், விரைவில் தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்திருக்கிறோம் என்றார்….

The post தமிழ் சினிமா படப்பிடிப்புகள் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,Pepsi ,R.R. K.K. Selvamani ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...