×

ராஜராஜ சோழன் பிறந்தநாள் அரசு விழா: முதல்வருக்கு விவசாயிகள், தொழிலாளர் கட்சி நன்றி

சென்னை: விவசாயிகள், தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: ராஜராஜ சோழன் தன் ஆட்சிக் காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டி உலகம் வியக்கும் வகையில் கலை நுட்பத்தை புகுத்தி, திராவிடக் கலைக்கு அச்சாரமாக பெருமை சேர்த்தவர். இப்படி எண்ணற்ற அரிய திட்டங்கள் மூலம் மக்களுக்கான அரிய பணியாற்றி பெருமை பெற்றவர் ராஜராஜ சோழன். தெற்காசியா முழுவதும் வெற்றி கொடி நாட்டியவர். ரோம் வரை சென்று வியாபாரத்தை நிலை நாட்டியவர். உலகெங்கும் கிடைத்துள்ள நாணயங்களில் 80 விழுக்காடு நாணயங்கள் சோழர்கால நாணயங்கள் என்பதன் மூலம் சோழர் காலத்தில் வணிகம் உலகம் முழுவதும் நடந்தது உறுதி செய்யப்படுகிறது. இப்படி 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தலைசிறந்த ஆட்சியை வழங்கிய சத்திரிய ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அரிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Rajaraja Cholan ,Birthday Government ,Labor Party ,Chief Minister , Rajaraja Cholan Birthday Government Celebration: Farmers, Labor Party Thank CM
× RELATED பாஜவின் ஏமாற்று வேலையை யாரும் நம்ப...