சென்னை: உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை: பி.இ, பி.டெக் பொதுக்கலந்தாய்வு முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, துணை கலந்தாய்வு நடைபெற உள்ளது. சிறப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற 12ம் வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி பயின்ற, தகுதி வாய்ந்த தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் மற்றும் பொதுக்கலந்தாய்வில் பங்கேற்க இயலாத மாணவர்களும் இந்த துணைக்கலந்தாய்வில் கலந்து கொண்டு இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை பதிவு செய்யலாம்.