தேனி: தேவர் ஜெயந்தி காரணமாக தேனியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இயங்கும் 36 மதுக்கடைகளை இன்றும் நாளையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பசும்பொன்னில் நாளை நடைபெற உள்ள முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக சிக்கல்,தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் வழித்தடங்கள் தவிர்த்து மற்ற வழித்தடங்களில் பொதுப் போக்குவரத்து நிறுத்தம்.