சென்னை: கார் மரத்தில் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியாகினர். திருக்கழுக்குன்றம் அடுத்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சாரனேஷ் என்கிற சரண்ராஜ் (21), கோரப்பட்டு கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் (23) மற்றும் சாலூர் கிராமத்தை சேர்ந்த பிரவின்குமார், நந்தகுமார், வேலு ஆகிய நண்பர்களான 5 பேரும் ஒரே காரில் நேற்றுமுன்தினம் புதுச்சேரிக்கு சென்று மீண்டும் நேற்று மாலை வீடு திரும்ப இசிஆரில் காரில் கல்பாக்கம் நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது வடபட்டினம் என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகேயுள்ள மரத்தில் மோதியது. இதில் சரண்ராஜ் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் படுகாயமடைந்த பிரவின்குமார், நந்தகுமார், வேலு ஆகிய 3 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர் சடலங்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.