×

சென்னையில் ரூ.8 கோடி மதிப்பீட்டிலான கோயில் சொத்து மீட்பு

சென்னை: சென்னை, அமைந்தகரை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான கட்டிடம், செனாய் நகர், புல்லா தெருவில் எண் 27 & 28 ல் 7500 சதுர அடி உள்ளது. இதனை ராஜா ரெட்டியார் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.

இவர் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமலும், உள்வாடகைக்கு விட்டுருந்ததாலும் இந்து சமய அறநிலையத்துறை சென்னை இணை ஆணையர்  -மண்டலம்- 2 அவர்களின் உத்தரவின்படி, வருவாய்துறை மற்றும் காவல்துறை உதவியுடன் அக்கட்டிடத்தின் முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தரை தளத்தில் உள்ள மேலும் 6  கடைகளுக்கு  வழக்கு நிலுவையில் உள்ளது. விரைவில் அதனையும் தீர்ப்பின் படி சுவாதினம் பெறப்படும். இன்றைக்கு சுவாதினம் பெறப்பட்ட சொத்தின் மதிப்பு 8 கோடியாகும்.

இந்த நடவடிக்கையின் போது சென்னை மண்டல உதவி ஆணையர் எம். பாஸ்கரன், வட்டாட்சியர் (ஆலைய நிர்வாகம்) காளியப்பன் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Temple Property Rescue ,Chennai , Recovery of temple property valued at Rs 8 crore
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...