×

மோடி ஆட்சியில் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை உள்ளது: கே.பாலகிருஷ்ணன் பரபரப்பு பேச்சு

சென்னை: மோடி ஆட்சியில் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை உள்ளது என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்  உரிமைக்கான சங்கத்தின் மாநில 4வது மாநாடு கடந்த மாதம் நடைபெற்றது. இம்மாநாட்டுப் பணிகளை செய்த வரவேற்பு குழுவினருக்கு பாராட்டு மற்றும் நன்றி அறிவிப்பு கூட்டம் ேநற்று நடந்தது.

இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:   மோடி அரசு மக்களுக்கு எதிரான பல கொடுமைகளைச் செய்து வருகிறார்கள். கார்ப்பரேட் ஆதரவாளராக மட்டுமே செயல்படுவோம் என பகிரங்கமாக அறிவித்து விட்டார்கள்.  உழைக்கும் மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத நிலை உள்ளது.   பணவீக்கம் வரலாறு காணாத வகையில் உள்ளது.

வேலைவாய்ப்பும் இல்லை.   படித்த பல இளைஞர்கள் வேலை இல்லாமல் சாலையில் நிற்கின்றனர். உயர் படிப்பு படித்தவர்கள் 5ஆயிரத்திற்கும் 10 ஆயிரத்திற்கும் பணி செய்கின்றனர். படிப்படியாக அனைத்து சலுகைகளையும் பறித்து வருகிறது மோடி அரசு. இந்த சூழ்நிலையில் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. மசூதி, தேவாலயங்களில் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் நுழைந்து மோதலை ஏற்படுத்த போகின்றனர். சாதிய மோதலை ஏற்படுத்த போகின்றனர். இவர்களை எதிர்த்து களமாட வேண்டிய தேவை நம் முன்னே ஏற்பட்டுள்ளது என்றார்.

Tags : Modi ,K. Balakrishnan , Modi regime, K. Balakrishnan, sensational speech
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...