×

புதர்மண்டி காணப்படும் கோயில் குளத்தை சீரமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

புழல்: புழல் ஒற்றைவாடை தெருவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்த கோயிலின்  குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.

இதனால், பக்தர்கள் மற்றும் கோயில் அருகில் வசிப்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இக்குளத்தை தூர்வாரி  சீரமைக்க அறநிலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என  பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Budharmandi , The temple pond where Budharmandi is found should be repaired: Devotees demand
× RELATED கடமலைக்குண்டு அருகே நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை