×

திருவாடானை அருகே காடாங்குடியில் சேதமடைந்த நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை

திருவாடானை: திருவாடானை அருகே காடாங்குடி பேருந்து நிறுத்தத்தில், 20 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையை சுற்று வட்டார கிராமங்களான காடாங்குடி, உசிலனகோட்டை, தண்டலக்குடி முகிழ்தகம், செக்காந்திடல் உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இந்த நிழற்குடையின் மேற்கூரையில் உள்ள சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுகின்றன. பயணிகள் அமரும் இருக்கைகள் உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் நிழற்குடையை பயன்படுத்த பயணிகள் அச்சப்படுகின்றனர்.
எனவே சேதமடைந்த நிழற்குடையை இடித்து அகற்றிவிட்டு புதிய நிழற்குடை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kadangudi ,Thiruvadana , Request to repair the damaged shade house at Katangudi near Thiruvadanai
× RELATED வாகனங்களின் டயரை பஞ்சராக்கும் சாலையை சீரமைக்க கோரிக்கை