×

10ம் வகுப்பு மறு கூட்டல் முடிவுகள் வெளியீடு

சென்னை: பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி மறு கூட்டல் செய்ய விண்ணப்பித்த மாணவர்களுக்கான முடிவுகள் இன்று மதியம் வெளியாகும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மே மாதம் நடந்த 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவ மாணவியருக்கு, ஆகஸ்ட் மாதம் துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் வெளியிட்டதில், சில மாணவர்கள் மறு கூட்டல் செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்து இருந்தனர். அவர்களின் விடைத்தாள்கள் மீண்டும் மறு கூட்டல் செய்யப்பட்டதில் சிலருக்கு மதிப்பெண்களில் மாற்றம் வந்துள்ளது. அப்படி மாற்றம் வந்துள்ளவர்களின் தேர்வு எண்களின் பட்டியல் www.dge.tn.gov.in  என்ற இணைய தளத்தில் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. அந்த பட்டியலில் இடம் பெறும் மாணவ மாணவியர் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags : 10th Class Re-consolidation Results Publication
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...