சென்னை: ஓதுவார் மற்றும் தேவாரம் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ள கோயில்களை கண்டறிந்து அந்த பணியிடங்களை நிரப்ப விளம்பர அறிவிப்பு செய்ய வேண்டும் என மண்டல இணை ஆணையர்களுக்கு அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டிந்தார். அதனை தொடர்ந்து, தற்போது அந்த பணியிடங்களுக்கு, நேரடி பணியாளர்களை நியமிக்க கோயில் நிர்வாகிகளுக்கு அறநிலையத்துறை ஆணையர் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.